உள்நாட்டு செய்திகள்

தேவாலயங்களில் ஞாயிறு ஆராதனைகள் இன்றும் ரத்து

லங்கையில் இரண்டாவது வாரமாக இன்றும் கத்தோலிக்க தேவாலயங்களில் ஞாயிறு ஆதாரனைகள் ரத்துச்செய்யப்பட்டுள்ளன.

எனினும் கர்தினால் மல்கம் ரஞ்சித் தேசிய தொலைக்காட்சிகளின் மூலம் ஆராதனைகளை நடத்தினார்.

ஏற்கனவே உயிர்த்த ஞாயிறு தினத்தில் இடம்பெற்ற தாக்குதல்களை அடுத்து ஞாயிறு ஆராதனைகள் ரத்துச்செய்யப்பட்டு பின்னர் இந்த வாரம் முதல் அது ஆரம்பமாகும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.

இதற்காக பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.
எனினும் கர்தினால் மல்கம் ரஞ்சித்துக்கு கிடைத்த வெளிநாட்டு புலனாய்வு தகவல்களின்படி தொடர்ந்தும் தாக்குதல் அச்சம் இருப்பது தெரியவந்துள்ளது.

இதனையடுத்தே, இந்த வாரமும் ஞாயிறு ஆராதனைகள் ரத்துச்செய்யப்பட்டன.

கருத்து தெரிவிக்க