உள்நாட்டு செய்திகள்கிழக்கு செய்திகள்புதியவை

கன்னியா வெந்நீரூற்று விவகாரம்; இடைக்கால தடை நீடிப்பு

திருகோணமலை கன்னியா வெந்நீரூற்று விவகாரம் தொடர்பாக வழங்கப்பட்ட இடைக்கால தடை உத்தரவு ஒக்டோபர் 7ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது.

இன்று குறித்த வழக்கு விசாரணைக்கு வந்த நிலையில் மனுதாரர் சார்பில் ஜனாதிபதி சட்டத்தரணி சுமந்திரனும், எதிர் மனுதாரர் சார்பில் சட்டமா அதிபர் திணைக்கள அதிகாரிகளும் மன்றில் முன்னிலையாகியிருந்தனர்.

குறித்த வழக்கினை கடந்த ஜூலை மாதம் 19ம் திகதி சட்டத்தரணி பிரசாந்தினி உதயகுமார் தாக்கல் செய்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

கருத்து தெரிவிக்க