உள்நாட்டு செய்திகள்புதியவை

பெரமுனவுடன் இணைந்த எஸ்.பி, டிலான் மீது நடவடிக்கை எடுக்கப்படும்

எஸ்.பி.திஸாநாயக்க மற்றும் டிலான் பெரேரா ஆகியோருக்கு எதிராக விரைவில் ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்படும் என ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் பொதுச்செயலாளர் மஹிந்த அமரவீர குறிப்பிட்டுள்ளார்.

எஸ்.பி.திஸாநாயக்க மற்றும் டிலான் பெரேரா ஆகியோர் இன்று(வியாழக்கிழமை) ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் உறுப்புரிமையைப் பெற்றுக் கொண்டனர்.

இதுகுறித்து ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

சுதந்திர கட்சியின் தலைவரான ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுடன் கலந்துரையாடி இது தொடர்பாக தீர்மானம் எடுக்கப்படும் என அவர் கூறியுள்ளார்.

இதேவேளை, குறித்த இருவரும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் அங்கத்துவம் பெற்றுள்ள நிலையில் சுதந்திர கட்சி நாடாளுமன்ற உறுப்புரிமை தொடர்பில் கேள்வி எழுப்பப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

கருத்து தெரிவிக்க