உள்நாட்டு செய்திகள்புதியவைவடக்கு செய்திகள்

சட்டவிரோத மணல் அகழ்வோர் அச்சுறுத்தல்; காவல்துறையிடம் முறைப்பாடு

சட்டவிரோத மணல் அகழ்வில் ஈடுபட்டு வரும் நபர்களால் தாம் வீதியில் அச்சுறுத்தலுக்கு உள்ளாக்கப்பட்டமை தொடர்பில் மாங்குளம் காவல் நிலையத்தில் முறைப்பாடு ஒன்று பதிவு செய்துள்ளதாக புதுக்குடியிருப்பு பிரதேச சபை உறுப்பினர் இ.சத்தியசீலன்தெரிவித்தார்.

முல்லைத்தீவு மாவட்டத்தின் ஒட்டுசுட்டான் பிரதேச செயலக பிரிவுக்குட்ப்பட்ட பகுதிகளில் மணல் அகழ்வு கிறவள் அகழ்வு மரக்கடத்தல் என்பன வகைதொகையின்றி இடம்பெற்றுவருகிறது

இந்த வகையில் குறித்த விடயம் தொடர்பாக பாதிக்கப்பட்ட குறித்த பிரதேச சபை உறுப்பினர் கடந்த பிரதேச கூடடத்திலும் சுட்டிக்காட்டியிருந்தார்.

இந்நிலையில் நேற்று மாலை தனது உறவினர்களின் வீட்டுக்கு வருகை தந்து செல்கின்ற போது மேழிவனம் பகுதியில் சட்டவிரோத மணல் அகழ்வில் ஈடுபட்துவரும் நபர் தன்னுடைய வாகனத்துக்கு முன்பாக வாகனங்களை நிறுத்தியதோடு தன்னை கீழே இறக்க முயற்சித்தார்.

அதனை தொடர்ந்து காவல்துறையின் உதவியை நாடி அவர் வீடு திரும்பியதாக அவர் தெரிவிக்கின்றார்

அத்தோடு குறித்த பகுதிகளில் இடம்பெறுகின்ற சட்டவிரோத மணல் அகழ்வு, மரக் கடத்தல் தொடர்பாக தொடர்ச்சியாக பிரதேச அபிவிருத்திக் குழுக் கூட்டங்களில்  தெரிவிக்கப்பட்ட நிலையிலும் இதுவரை அது தொடர்பான எந்தவிதமான நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படவில்லை.

உரிய தரப்புக்கள் சரியான சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்வதில்லை எனவும் இதனாலேயே இவ்வாறு தனிநபர்கள் பாதிக்கப்படுவதாகவும் எனவே உரிய திணைக்களங்கள் இது தொடர்பாக சட்ட நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் எனவும் புதுக்குடியிருப்பு பிரதேச சபை தவிசாளர் செ .பிரேமகாந் தெரிவித்தார்.

கருத்து தெரிவிக்க