உள்நாட்டு செய்திகள்கொழும்பு செய்திகள்சமீபத்திய செய்திகள்புதியவை

ஶ்ரீ.சு.கட்சி, ஶ்ரீ.பொ.பெரமுன இடையிலான பேச்சுவார்த்தை நிறைவு!

ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சி மற்றும் ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவுக்கு இடையிலான பேச்சுவார்த்தை நிறைவு பெற்றுள்ளது.

இந்தக் கலந்துரையாடல் எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் இன்று (27) முற்பகல் நடைபெற்றது.

பேச்சுவார்த்தையில் கலந்துரையாடப்பட்ட விடயங்கள் குறித்து கட்சித் தலைவர்கள் இருவருக்கும் தௌிவுபடுத்தவுள்ளதாக பொதுஜன பெரமுன சார்பில் கட்சியின் தேசிய ஏற்பாட்டாளர் பசில் ராஜபக்ஸ குறிப்பிட்டுள்ளார்.

ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியைப் பிரதிநிதித்துவப்படுத்தி, கட்சியின் பொதுச் செயலாளர் தயாசிறி ஜயசேகர, கட்சியின் பொருளாளர் லசந்த அழகியவன்ன மற்றும் ஐக்கிய மக்கள் சுதந்தரக் கூட்டமைப்பின் பொதுச் செயலாளர் மஹிந்த அமரவீர ஆகியோர் கலந்து கொண்டாதாக, நியூஸ்பெஸ்ட்டின் செய்தியாளர் தெரிவித்துள்ளார்.

பொதுஜன பெரமுன சார்பில் கட்சியின் தேசிய ஏற்பாட்டாளர் பசில் ராஜபக்ஸ மற்றும் பேராசிரியர் G.L. பீரிஸ் ஆகியோர் பங்கேற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

கருத்து தெரிவிக்க