உள்நாட்டு செய்திகள்கொழும்பு செய்திகள்சமீபத்திய செய்திகள்புதியவை

கொழும்பு பாதுகாப்பு மாநாடு – ஜனாதிபதி தலைமையில்!

கொழும்பு பாதுகாப்பு மாநாடு, கொழும்பு பண்டாரநாயக்க ஞாபகர்த்த மாநாட்டு மண்டபத்தில் எதிர்வரும் வியாழக்கிழமை ஆரம்பமாகவுள்ளது.

ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன ஆரம்ப நிகழ்வில் சிறப்பு விருந்தினராக கலந்துகொள்ளவுள்ளார்.

இந்த மாநாடு இரண்டு தினங்கள் இடம்பெறவுள்ளது. இதில் 13 வெளிநாட்டு புத்திஜீவிகளும், 12 உள்நாட்டு புத்திஜீவிகள் உள்ளிட்ட 800 க்கும் அதிகமானோர் கலந்து கொள்ளவுள்ளனர்.

42 நாடுகளைச் சேர்ந்த பாதுகாப்புத் துறையுடன் தொடர்புடைய பிரதானிகள் இந்த மாநாட்டில் கலந்து கொள்ளவுள்ளனர்.

[அரச செய்தி திணைக்களம்]

கருத்து தெரிவிக்க