மித்தெனிய, சமூககொவிபல பிரதேசத்திலுள்ள வீடொன்றில் இடம்பெற்றுள்ள துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் ஒருவர் காயமடைந்துள்ளதாக, பொலிஸார் தெரிவித்தனர்.
நேற்றிரவு (22) இடம்பெற்றுள்ள இச்சம்பவத்தில், சமூககொவிபல தோரகொலயாய பகுதியைச் சேர்ந்த தீபால் மதுரங்க (20) என்பவர் காயமடைந்துள்ளார்.
காயமடைந்தவர் எம்பிலிப்பிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றார்.
சந்தேகநபரை கைது செய்யும் வகையில் பொலிஸார் விசாரணையை முன்னெடுத்துள்ளனர்.
கருத்து தெரிவிக்க