பொலிஸ் அதிகாரிகளின் பதவி உயர்வு பிரச்சினை விரைவில் தீர்க்கப்படுமென இராஜாங்க அமைச்சர் ருவான் விஜேவர்த்தன தெரிவித்தார்.
பாராளுமன்ற உறுப்பினர் நலிந்த ஜயதிஸ்ஸ எழுப்பிய வாய்மூல கேள்விக்கு பதிலளிக்கும் போதே இராஜாங்க அமைச்சர் இதனை குறிப்பிட்டார்.
உப பொலிஸ் பரிசோதகர்கள் பதவியில் 10 வருடம் சேவை புரிந்த 539 பேருக்கும், பெண் உப பரிசோதகர்கள் 56 பேருக்கும் பொலிஸ் பரிசோதகர் பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளதாக இராஜாங்க அமைச்சர் ருவான் விஜேவர்த்தன இன்று பாராளுமன்றில் சுட்டிக்காட்டினார்.
கருத்து தெரிவிக்க