உள்நாட்டு செய்திகள்சமீபத்திய செய்திகள்புதியவை

படகு மூலம் அவுஸ்திரேலியா செல்ல முற்பட்ட 10 பேர் கைது

சட்டவிரோதமான முறையில் படகு மூலம் அவுஸ்திரேலியா செல்ல முற்பட்ட 10 பேரை வெண்ணப்புவ பொலிஸார் இன்று காலை கைது செய்துள்ளனர்.

குறித்த சந்தேக நபர்கள் நயினமடம பகுதியில் வீடொன்றில் சந்தேகத்துக்கிடமான முறையில் தங்கியிருந்த வேளையில் கைது செய்யப்பட்டதாக கூறுப்படுகின்றது.

கைது செய்யப்பட்ட 10 பேரில் இரண்டு சிறுவர்கள் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளதுடன், சந்தேக நபர்கள் அனைவரும் மாரவில நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட உள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர் .

கருத்து தெரிவிக்க