உள்நாட்டு செய்திகள்முக்கிய செய்திகள்

மஹிந்தவின் இல்லத்தில் முக்கிய பேச்சு! கோட்டாவும் பங்கேற்பு!

ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன தலைமையிலான கூட்டு எதிரணியில் அங்கம் வகிக்கும் பங்காளிக்கட்சிகளின் தலைவர்கள் பங்கேற்கும் கூட்டம் இன்று மாலை 6 மணிக்கு நடைபெறவுள்ளது.

கொழும்பு – விஜேராம மாவத்தையிலுள்ள எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்சவின் உத்தியோகப்பூர்வ வதிவிடத்தில் நடைபெறவுள்ள மேற்படி சந்திப்பில் கூட்டு எதிரணியின் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்சவும் கலந்துகொள்ளவுள்ளார்.

ஜனாதிபதி வேட்பாளராக பெயரிடப்பட்ட பின்னர் கோட்டாபய ராஜபக்ச பங்கேற்கும் முதலாவது கட்சித் தலைவர்கள் கூட்டம் இதுவென்பது குறிப்பிடத்தக்கது.

ஜனாதிபதி தேர்தலுக்கான பரப்புரை நடவடிக்கைகள், சுதந்திரக்கட்சியுடனான கூட்டணி  உட்பட சமகால அரசியல் நிலைவரங்கள் தொடர்பில் இதன்போது விரிவாக கலந்துரையாடப்படவுள்ளன.

 

கருத்து தெரிவிக்க