உள்நாட்டு செய்திகள்சமீபத்திய செய்திகள்புதியவைவடக்கு செய்திகள்

வைத்தியசாலையில் கையடக்க தொலைபேசிகளை திருடிய இளைஞன் கைது!

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் தொடர்ச்சியாக கையடக்க தொலைபேசிகளை திருடி வந்த 21 வயது இளைஞன் ஒருவரை வைத்தியசாலை பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் மடக்கிப் பிடித்து யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் ஒப்படைத்துள்ளனர்.

இந்த சம்பவம் இன்று யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் இடம்பெற்றுள்ளது.

இது தொடர்பாக மேலும் தெரியவருவதாவது,

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் தொடர்ச்சியாக மூன்று நாட்கள் கையடக்க தொலைபேசிகள் திருடு போயுள்ளன.

இதனை உணர்ந்த பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் வைத்தியசாலையில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்புக் கமராவின் உதவியுடன் சந்தேக நபரை அடையாளம் கண்டுள்ளனர்.

இந்நிலையில் வைத்தியசாலைக்கு இன்றும் குறித்த இளைஞன் வருகை தந்துள்ளார்.இதன் போது நோயாளர் விடுதியில் கடமையில் ஈடுபட்டிருந்த தாதியர் ஒருவரின் கையடக்க தொலைபேசியை திருட முற்பட்ட வேளை மடக்கி பிடித்துள்ளனர்.

கருத்து தெரிவிக்க