உள்நாட்டு செய்திகள்சமீபத்திய செய்திகள்புதியவைவடக்கு செய்திகள்

பொதுமக்களின் தேவைகளை அறிந்த நேர்மையான சிறந்த அமைச்சர் சஜித் – ஜனாதிபதி

‘அனைவருக்கும் நிழல் உதா கம்மான’ செயற்றிட்டத்தின் கீழ் நிர்மாணிக்கப்பட்ட மேலும் மூன்று கிராமங்கள் நேற்று (18) பொலன்னறுவையில் திறந்து வைக்கப்பட்டன.

இந்த நிகழ்வில் பிரதம விருந்தினராக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கலந்து கொண்டிருந்தார்.

இங்கு கலந்து கொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி அமைச்சர் சஜித் பிரேமதாஸ தொடர்பில் கருத்து தெரிவித்தார்.

இங்கு கருத்து தெரிவித்த ஜனாதிபதி,இந்த நாட்டு பொதுமக்களின் அபிலாஷைகளை அறிந்த நேர்மையான ஊழலற்ற சிறந்த அமைச்சர் சஜித் பிரேமதாஸ என வர்ணித்தார்.

இந்நிகழ்வில் அமைச்சர் சஜித் பிரேமதாஸ உள்ளிட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள் பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவரும் அமைச்சருமான சஜித் பிரேமதஸவின் அழைப்பின் பேரில் ஜனாதிபதி நிகழ்வில் பங்கேற்றிருந்தம்மை குறிப்பிடத்தக்கது.

 

 

 

கருத்து தெரிவிக்க