உள்நாட்டு செய்திகள்மலையகச் செய்திகள்

பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு நிவாரணம் வழங்க ஆளுனர் தீர்மானம்

மலையகத்தில் தொடர்ந்த மழை காரணமாக பல்வேறு இடங்களில் பல சேதங்கள் ஏற்பட்டதோடு பல குடும்பங்கள் பாதிப்புக்குள்ளாகியுள்ளன.

அவ்வாறு இயற்கை சீற்றத்தால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு நிவாரணங்களை வழங்க மத்தியமாகாண ஆளுனர் கீர்த்தி தென்னக்கோன் நவடிக்கை எடுக்கவுள்ளதாக குறிப்பிட்டார்.

நுவரெலியா மாவட்டத்தின் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் அமைப்பாளர் சைலஜா அலக்ஷாண்டரின் கோரிக்கைக்கு அமையவே இந்நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இயற்கை சீற்றத்தால் அனர்த்தத்திற்கு உள்ளாகிய இடங்களையும் நேரில் சென்று பார்வையிட்டு அதற்கான தீர்வு வழங்க நடவடிக்கை எடுக்கவுள்ளதாகவும் கீர்த்தி தென்னக்கோன் குறிப்பிட்டமை குறிப்பிடத்தக்கது.

கருத்து தெரிவிக்க