உள்நாட்டு செய்திகள்கொழும்பு செய்திகள்சமீபத்திய செய்திகள்புதியவைமுக்கிய செய்திகள்

கோட்டாபயவின் இரட்டை பிரஜாவுரிமை குறித்து இன்று ஆய்வு!

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்‌ஷவுக்கு எதிராக தேர்தல்கள் ஆணைக்குழுவில் சமர்ப்பிக்கப்பட்ட முறைப்பாடு குறித்து ஆணைக்குழு இன்று ஆராயவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனை தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.

கோட்டாபய ராஜபக்‌ஷவின் கடவுச்சீட்டின் உண்மைத் தன்மை மற்றும் இலங்கை பிரஜாவுரிமை குறித்து ஆணைக்குழு ஆராயவுள்ளது.

அவர் குறித்த முறைப்பாடொன்று தமக்குக் கிடைத்திருப்பதாகவும் தேர்தல்கள் ஆணையாளருக்கு இது தொடர்பில் தெரியப்படுத்தப்பட்டிருப்பதுடன் இன்று இது பற்றி ஆராயப்படும் என்றும் மஹிந்த தேசப்பிரிய மேலும் குறிப்பிட்டுள்ளார்.

கருத்து தெரிவிக்க