உள்நாட்டு செய்திகள்புதியவை

ஜனாதிபதி ஆணைக்குழுவினருக்கு தெரிவுக்குழு அழைப்பு

உயிர்த்த தாக்குதல் குறித்து ஆராய ஜனாதிபதியினால் நியமிக்கப்பட்ட ஆணைக்குழு உறுப்பினர்களுக்கு நாளை மறுதினம் மீண்டும் நாடாளுமன்ற தெரிவிக்குழு முன்னிலையில் ஆஜராக அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

உயர்­நீ­தி­மன்ற நீதி­ய­ரசர் விஜித மலல்­கொட மற்றும் அதன் உறுப்­பி­னர்­க­ளான முன்னாள் பொலிஸ்மா அதிபர் என்.கே.இலங்­ககோன், சட்டம் மற்றும் ஒழுங்கு அமைச்சின் முன்னாள் செய­லாளர் பத்­ம­சிறி ஜய­மான்ன ஆகிய மூவ­ருக்கே அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இதேவேளை இந்த வார இறுதிக்குள் ஜனாதிபதியையும் அழைக்க தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

கருத்து தெரிவிக்க