உள்நாட்டு செய்திகள்கிழக்கு செய்திகள்புதியவை

அட்டாளைச்சேனையில் யானைகள் அட்டகாசம்: அச்சத்தில் மக்கள்

அட்டாளைச்சேனை பிரதேச செயலகப் பிரிவிற்குட்பட்ட ஆலம்குளம் கிராம குடியிருப்புப் பிரதேசத்தில் காட்டு யானைகள் சில இன்று(18) அதிகாலை உட்புகுந்து கடும் சேதங்களை உண்டாக்கியுள்ளன என அப்பகுதி மக்கள்தெரிவிக்கின்றனர்.

அதிகாலை ஒரு மணியளவில் மக்கள் குடியிருப்புப் பிரதேசத்திற்குள் உட்புகுந்த யானைகளை விரட்ட முற்பட்ட போது அவை தாக்குவதற்கு எத்தனித்தாகவும், யானைகளின் தாக்குதலிலிருந்து தாம் தெய்வாதீனமாக உயிர் தப்பியதாகவும் பிரதேச மக்கள் தெரிவிக்கின்றனர்.

குறித்த யானைகள் குடியிருப்புகளின் பாதுகாப்பிற்காக அமைக்கபப்ட்ட மதிற்சுவர்கள் சிலவற்றையும், நுழைவாயில் கதவு, பாதுகாப்பு வேலிகள் போன்றவற்றை உடைத்து நாசம் செய்துள்ளது,.

அத்துடன் பெறுமதி மிக்க மரங்கள் சிலவற்றையும் சேதப்படுத்தியுள்ளதுடன் மேட்டு நிலப் பயிர்கள் மற்றும் மரம் செடி கொடிகள் சிலவற்றையும் தாக்கியுள்ளன என மக்கள் அங்கலாய்க்கின்றனர்.

மேலும் அச்சத்தில் உறைந்து இருக்கும் தம்மை பாதுகாக்குமாறு அதிகாரிகளுக்கு மக்கள் மேலும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கருத்து தெரிவிக்க