உள்நாட்டு செய்திகள்புதியவைமுக்கிய செய்திகள்

தேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளராக அனுர குமார

தேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளராக மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர்  அனுர குமார திஸாநாயக்க அறிவிக்கப்பட்டுள்ளார்.

காலி முகத்திடலில் இன்று இடம்பெறும் தேசிய மக்கள் சக்தி இக்கூட்டத்தில் 20 வருடங்களின் பின்னர் மக்கள் விடுதலை முன்னணி சார்பில்  இவர் ஜனாதிபதி வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.

தேசிய மக்கள் சக்தியின் வேட்பாளர் அறிவிப்பை எதிர்பார்த்து காலி முகத்திடலில் கட்சியின் ஆயிரக்கணக்கான ஆதரவாளர்கள் கூடியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

மேலும் இந்த கூட்டத்தில் தேசிய மக்கள் சக்தி இயக்கம் என்ற பெயரில் 28 பொது அமைப்புக்களை உள்ளடக்கிய மக்கள் படையணியும் உத்தியோகபூர்வமாக அங்குரார்ப்பணம் செய்யப்பட்டுள்ளது.

கருத்து தெரிவிக்க