உள்நாட்டு செய்திகள்புதியவைவடக்கு செய்திகள்

கொழும்பில் மொட்டு அணியின் தேசிய இளைஞர் மாநாடு

கொழும்பில் அடுத்தவாரம் சிறிலங்கா பொது மக்கள் முன்னணியின் தேசிய இளைஞர் மாநாடு நடைபெறவுள்ளதாக கட்சியின் வடக்கு இளைஞர் அணியினர் தெரிவித்தனர்.

சிறிலங்கா பொது மக்கள் முன்னணியின் இளைஞர் அணியின் ஊடகவியாளர் சந்திப்பு யாழ்ப்பாணத்தில் நடைபெற்றது.இதன் போதே இந்த அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது.

எதிர்வரும் 24 ஆம் திகதி கொழும்பு நெலும் பொகுணவில் கட்சியின் இளைஞர் அணி மாநாடு நடைபெறவுள்ளது.

அரசியலுக்கு அப்பால் வடக்கில் உள்ள இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு ,தலைமைத்துவம்,போன்ற பயிற்சிகள் அவசியம்.இளைஞர்களை கட்சியில் இணைப்பது போஸ்டர் ஓட்டுவதற்கு அல்ல.

கட்சியின் இளைஞர் அணியின் உறுப்பினர்களுக்கும் வெளிநாட்டில் பல்வேறு தலைமைத்துவ பயிற்சிகள் வழங்கப்படவுள்ளது.

அவர்கள் வடக்கு இளையர்களை வழிநடத்துவார் கள்.கல்வி மற்றும் விளையட்டில் நாம் முன்னேற வேண்டும். கொழும்பில் நடைபெறும் இந்த மாநாட்டுக்கு வடக்கில் இருந்தும் இளைஞர்கள் அழைத்து செல்லப்படவுள்ளனர் என இதன் போது மேலும் தெரிவிக்கப்பட்டது

கருத்து தெரிவிக்க