உள்நாட்டு செய்திகள்சமீபத்திய செய்திகள்புதியவைவடக்கு செய்திகள்

ஓ.எம்.பி நிறுவனம் உடனடியாக அமைக்க வேண்டும்

காணாமல்போனோர் விடயத்திற்கு இன்றுவரை தீர்வு கிட்டாத நிலையில் அதற்காக அமைக்கப்பட்ட ஓ.எம்.பி நிறுவனம் உடன் ஆரம்பிக்கப்பட வேண்டும் என முல்லைத்தீவு மாவட்டத்தைச் சேர்ந்த காணாமல்போன உறவின் தாயார் கந்தசாமி தவமலர்  தெரிவித்தார்.

நிலைமாறுகால நீதிக்காய் எங்களின் குரல்கள்’என்னும்  விழுது ஆற்றல் மேம்பாட்டு மையம் மற்றும் வடக்குகிழக்கு மாவட்டப் பெண்கள் சமாசங்கள் இணைந்து பெண் தலைமை தாங்கும் குடும்பங்களின் பிரச்சினைகளினைப் பகிர்தல் நிகழ்வு நேற்று முன்தினம் திருநெல்வேலி ஆடியபாதம் வீதியில்உள்ள  லட்சுமி திருமண மண்டபத்தில் இடம்பெற்றது.

இதன்போது  கலந்துகொண்டு கருத்துதெரிவிக்கும்போதே மேற்கண்டவாறு தெரிவித்தனர்.

இங்கே இது தொடர்பில் குறித்த பெண்மணி தொடர்ந்தும் கருத்து தெரிவிக்கையில் ,

காணாமல் ஆக்கப்பட்டவர்கள் பிரச்சணையானது மிகப் பெரியது.

நான் கணவரை இழந்து இரு பிள்ளைகளை இழந்து தனிமையில் வாடுகின்றேன்.

3 பேர் காணாமல் போன நிலையில் நான் தனிமையில் உள்ளேன்.

எனது உறவுகளையும் அதேபோன்ற உறவுகளையும் தேடும் ஆயிரக் கணக்கானோரில் நானும்ஒருவர்.

காணாமல்போனோர் சான்றிதழ் தருவதானால் முதலில்  காணாமல் ஆக்கப்பட்டவர் எனப் பதிய வேண்டும்.

எமக்கு எங்கள் உறவுகள் வேண்டும். எமது வேதனையை யாரிடம் கூருவது என்றுகூட தெரியாமல் இன்றுநிலமை உள்ளது.

அடுத்து ஓ.எம்.பி நிறுவனம்  வேண்டும். அரசு எம்மை ஏமாற்றியவாறே உள்ளது.

ஓ.எம்.பி வேண்டும் உடனடியாக அந்த அலுவலகம் இங்கே உடனடியாக அமைக்கப்பட வேண்டும். என்றார்.

கருத்து தெரிவிக்க