உள்நாட்டு செய்திகள்மலையகச் செய்திகள்

கந்தபளையில் பெரும் சோகம்! தாயும், தந்தையும் பலி – பிள்ளைகள் படுகாயம்!!

நுவரெலியா – உடபுஸ்ஸலாவ பிரதான வீதியில் எஸ்கடேல் தோட்டம் “ஐஸ் பீலி” எனும் பகுதியில் சுமார் 100 அடி பள்ளத்தில் ஆட்டோ வீழ்ந்து விபத்துக்குள்ளானதில், இருவர் பலியாகினர். மேலும் மூன்று படுகாயமடைந்துள்ளனர்.

இன்று (17) நடைபெற்ற இவ்விபத்தில் ஆட்டோவில் பயணித்த ஒரே குடும்பத்தை ஐவரில் இருவர் பலத்த காயங்களுடன் நுவரெலியா மாவட்ட வைத்தியசாலைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே, உயிரிழந்தனர் என கந்தப்பளை காவல்துறையினர் தெரிவித்தனர்.

வலப்பனை – மந்தாரநுவர – எலமுல்ல பகுதியைச் டி.பி.ரூபசிங்ஹ (வயது 50) ரோஹினி குமாரி (வயது 45) ஆகியோரே, இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.இவ்விருவரும் கணவன், மனைவியென விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

எலமுல்லை பிரதேசத்திலிருந்து நுவரெலியாவை நோக்கி குறித்த ஆட்டோவில் தாய், தந்தை வயதுடைய சிறுவன், சிறுமிகள் (பிள்ளைகள்) ஆகியோர் பயணித்துள்ளனர்.

க.கிஷாந்தன்

கருத்து தெரிவிக்க