உள்நாட்டு செய்திகள்சமீபத்திய செய்திகள்புதியவைவடக்கு செய்திகள்

‘நல்லூர்க் கந்தன் ஆலயத்தில் புதிய ஸ்கானர் இயந்திரங்கள்’

வரலாற்று பிரசித்தி பெற்ற நல்லூர்க் கந்தன் ஆலயத்தில் பாதுகாப்பு சோதனைகளுக்காக புதிய ஸ்கானர் இயந்திரங்கள் பொருத்தப்பட்டுள்ளன.
ஆலய திருவிழாவை முன்னிட்டு இப் முறை அதிகளவிலான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருக்கின்றன.
இதற்கமைய ஆலயத்திறகு வருபவர்களிடம் சோதனைகளும்  மேறகொள்ளப்பட்டிருந்தன.
இந் நிலையில் பொலிஸாரின் இச் சோதனை நடவடிக்கைகளால் ஆலயத்திற்கு செல்கின்ற அடியவர்கள் பல அசௌகரியங்களை எதிர்நோக்குவதாக வடக்கு ஆளுநரின் கவனத்திற்கு கொண்டு வரப்பட்டிருந்தன.
இதனையடுத்து பொது மக்களின் சிரமங்களைக் குறைப்பதற்காக புதிய ஸ்கானர் இயந்திரங்களை ஆலய சூழலில் பொருத்துவதற்கு நடவடிக்கை எடுத்துள்ளதாக ஆளுநரும் அறுவுத்திருந்தார்.
இதற்கமைய நல்லூர்க் கந்தனின் பத்தாம் திருவுழாவான இன்று ஸ்கானர் இயந்திரங்கள் பொருத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

கருத்து தெரிவிக்க