உள்நாட்டு செய்திகள்புதியவைமுக்கிய செய்திகள்

‘கோத்தாவுக்கு ஆதரவு என்ற செய்தியில் உண்மையில்லை’ : மஹிந்த

பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோத்தபாய ராஜபக்ஷவுக்கு ஆதரவளிப்பது குறித்து ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி இன்னும் தீர்மானிக்கவில்லை என ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் பொதுச் செயலாளர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.

மொட்டு அணியின் வேட்பாளர் கோத்தபாயவுக்கு ஆதரவளிப்பதற்கு சுதந்திர கட்சியின் மத்திய குழு கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டதாக நாடாளுமன்ற உறுப்பினர் சரத் அமுனுகம தெரிவித்துள்ள தகவல் உண்மைக்கு புறம்பானதாகும். நாம் இது வரையில் அவ்வாறான தீர்மானத்தை எடுக்கவில்லை.

செப்டெம்பரில் இடம்பெறவுள்ள கட்சி கூட்டத்தின் போதே ஆதரவளிப்பது தொடர்பில் அறிவிக்கப்படும் என்று அவர் கூறினார்.

கருத்து தெரிவிக்க