விளையாட்டு செய்திகள்

நான் ஒருநாள் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறவில்லை:கெயில்

தென்னாபிரிக்க அணியின் நட்சத்திர வீரர் கிறிஸ் கெயில் ஒரு நாள் போட்டிகளில் இருந்து ஒய்வு பெறவில்லை என தெரிவித்துள்ளார்.

கிறிஸ் கெயில் வெளியிட்டுள்ள காணொளி ஒன்றின் மூலம் தான் இன்னும் ஒருநாள் போட்டிகளில் இருந்து ஓய்வுபெறவில்லை என குறிப்பிட்டுள்ளார்.

இந்தியாவுடனான 3 வது ஒருநாள் போட்டியே அவரின் இறுதிப்போட்டியாக அமையும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையிலேயே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

மேலும் நான் தொடர்ந்தும் விளையாடுவேன் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

கெயில் சமீபத்தில் பிரையன் லாராவின் ஒருநாள் ஓட்ட சாதனையை முறியடித்துள்ளார்.

உலகக் கிண்ணத்துக்கு பிறகு ஜூன் மாதத்தில், ஓய்வு பெறுவதாக தீர்மானித்திருந்த கெயில்  தனது முடிவை  மாற்றியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

கருத்து தெரிவிக்க