உள்நாட்டு செய்திகள்சமீபத்திய செய்திகள்புதியவைமலையகச் செய்திகள்

மூன்று மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்ட மண்சரிவு எச்சரிக்கை மேலும் நீடிப்பு

இரத்தினபுரி, நுவரெலியா, மற்றும் கேகாலை ஆகிய மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்ட மண்சரிவு அபாய எச்சரிக்கை இன்று (15) மாலை 4 மணி வரை நீடிக்கப்பட்டுள்ளது.

மண்சரிவு, கற்பாறைகள் சரிதல் மற்றும் நிலம் தாழிறங்குதல் ஆகியன தொடர்பில் அவதானத்துடன் இருக்குமாறு தேசிய கட்டட ஆய்வு நிறுவகம், மக்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

இதேவேளை, இரத்தினபுரி பகுதியில் களு கங்கையின் மில்லகந்த பகுதி நீர்மட்டம், தொடர்ந்தும் வெள்ளப்பெருக்கு மட்டத்தை அண்மித்து காணப்படுதாக நீர்ப்பாசனத் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதனால் பாலிந்த நுவர, புளத்சிங்கள, கிரிஎல்ல, இங்கிரிய, மதுராவல, மில்லனிய மற்றும் களுத்துறை பிரதேச செயலாளர் பிரிவுகளிலும் ஆற்றை அண்மித்த பகுதிகளில் வாழும் மக்களை அவதானத்துடன் செயற்படுமாறு நீர்ப்பாசனத் திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது.

கருத்து தெரிவிக்க