உள்நாட்டு செய்திகள்கொழும்பு செய்திகள்புதியவை

அமைச்சர் நவீன் திசாநாயக்க முல்லைத்தீவு பயணம்!

பெருந்தோட்ட அமைச்சர் நவீன் திசாநாயக்க இன்று முல்லைத்தீவு மாவட்டத்துக்கான விஜயமொன்றை மேற்கொண்டிருந்தார்

முல்லைத்தீவுக்கு விஜயம் மேற்கொண்ட அமைச்சர் முல்லைத்தீவு மாவட்டத்தின் பல்வேறு நிகழ்வுகளிலும் கலந்துகொண்டார் அந்த வகையிலே காலை 10.30 மணிக்கு புதுக்குடியிருப்பில் அலுவலகம் ஒன்றை திறந்து வைத்த அமைச்சர் காலை 11 மணியளவில் முல்லைத்தீவு மாவட்ட செயலகத்திற்கு வருகை தந்து முல்லைத்தீவில் தெரிவு செய்யப்பட்ட பயனாளிகளுக்கு தென்னை மரக்கன்றுகள் வழங்கி வைத்தார்

வடக்கையும் கிழக்கையும் எல் வலயமாக இணைத்து தென்னை பயிர் செய்கையை அபிவிருத்தி செய்யும் நோக்கோடு இடம்பெற்ற இந்த நிகழ்வு முல்லைத்தீவு மாவட்ட செயலாளர் திருமதி ரூபவதி கேதீஸ்வரன் தலைமையில் இடம்பெற்றது

இதன்போது 200க்கும் மேற்பட்ட பயனாளிகளுக்கு தென்னை பயிர்ச்செய்கைக்கான மானிய தொகை வழங்கி வைக்கப்பட்ட்து

குறித்த நிகழ்வில் அமைச்சர் நவீன் திசாநாயக்க வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் திருமதி சாந்தி ஸ்ரீஸ்கந்தராசா மற்றும் பிரதேச செயலாளர்கள் அரச அதிகாரிகள் பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்

கருத்து தெரிவிக்க