உள்நாட்டு செய்திகள்புதியவை

வேட்பாளராக அறிவிக்கப்பட்ட பின்னர் முதல் பூஜையில் பங்கேற்கும் கோட்டா!

மொட்டு அணியின் ஜனாதிபதி வேட்பாளராக பெயரிடப்பட்டுள்ள கோட்டாபய ராஜபக்ஷ அநுராதபுரத்திற்கு விஜயம் செய்யவுள்ளார்.

இன்று (திங்கட்கிழமை) இரவு 7 மணிக்கு ருவன்வெலி மஹா விகாரையில் நடைபெறவுள்ள விசேட பூஜையில் அவர் கலந்துகொள்ளவுள்ளார்.

இந்த நிகழ்வில் கோட்டாபய ராஜபக்ஷ, எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஷ உள்ளிட்ட பலரும் கலந்து கொள்ளவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்த வருகையினை முன்னிட்டு ருவன்வெலி மஹா விகாரையினை அண்மித்த பகுதிகளில் விசேட பாதுகாப்பு ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

கோட்டாபய ஜனாதிபதி வேட்பாளராக அறிவிக்கப்பட்டதன் பின்னர் பங்கேற்கவுள்ள முதல் சமய நிகழ்வாக இது காணப்படுகின்றது.

கருத்து தெரிவிக்க