உள்நாட்டு செய்திகள்சமீபத்திய செய்திகள்புதியவைமலையகச் செய்திகள்

‘சொன்ன வார்த்தையை காப்பாற்றினார் ராதாகிருஸ்ணன்’

தேர்தல் களம் சூடு பிடித்திருக்கும் இக்காலக்கட்டத்தில் மலையகத்தில் பல்வேறு அபிவிருத்தி பணிகள் இடம்பெற்று வருகின்றன.

அந்தவகையில் பல வருடமாக வற்றிய ஆறு போல காட்சியளித்த ஹெரோ கீழ்ப்பிரிவு தோட்ட பாதையை புனரமைக்க அமைச்சர் ராதாகிருஸ்ணனால் அடிக்கல் நாட்டப்பட்டது.

‘அடிக்கல் நாட்டினார் வேலை நடக்குமா” என எதிர்பார்த்த மக்களுக்கு எதிர்பார்பை நிறைவேற்றும் வகையில் பாதை வேலை தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

இதனால் ஆனந்தத்தில் ஹெரோ கீழ்ப்பிரிவு மக்கள் காணப்படுவதோடு இத்தனை காலமும் சீரற்று கிடந்த பாதையை சீரமைக்கும் ராதாகிருஸ்ணனுக்கு நன்றியையும் தெரிவித்து கொள்கின்றனர்.

கருத்து தெரிவிக்க