உள்நாட்டு செய்திகள்வடக்கு செய்திகள்

‘எழுக தமிழ்-2’ எழுச்சிக் கூட்டம் ஒத்திவைப்பு!

தமிழ்  மக்கள்  பேரவையால் யாழ் மாவட்டத்தில்  செப்டம்பர்  7 ஆம் திகதி நடாத்தப்படவிருந்த ‘எழுக தமிழ் -2’  எழுச்சிக் கூட்டம் செப்டம்பர் 16 ஆம் திகதிவரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

எழுக தமிழ்  நிகழ்வில் கட்சி வேறுபாடுகளுக்கப்பால் தமிழர் நலனில் அக்கறையுள்ள அனைவரையும் கலந்து கொள்ளுமாறு தமிழ் மக்கள் பேரவை அழைப்பு விடுத்துள்ளது.

தமிழ் மக்கள் பேரவையின் கூட்டம் பேரவையின் இணைத்தலைவர்களான  முன்னாள் முதலமைச்சர் சீ.வீ.விக்கினேஸ்வரன் , வைத்திய கலாநிதி பூ.லக்‌ஷ்மன் ஆகியோர் தலைமையில் யாழ்பொது நூலக கேட்போர் கூடத்தில் இன்று சனிக்கிழமை மாலை நடைபெற்றது.

இதன் போது பேரவையின் செயற்பாடுகள் மற்றும் சமகால அரசியல் நிலைமைகள் தொடர்பில் ஆராயப்பட்டன . இதன்போதே நிகழ்வை ஒத்திவைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

 

கருத்து தெரிவிக்க