உள்நாட்டு செய்திகள்புதியவை

யாழ் பல்கலைக்கழகத்தில் பயிலும் 7 மாணவர்கள் கைது

யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் பயிலும் 7 மாணவர்களை கைதுசெய்துள்ளதாக யாழ்ப்பாணம் பொலிஸார் தெரிவித்தனர்.

யாழ்ப்பாண பல்கலைக் கழக விஞ்ஞான பீட மாணவர்களுக்கு இடையில் கடந்த சில தினத்துக்கு முன்னர் பல்கலைக்கழக வளாகத்தில் மோதல் இடம்பெற்ற நிலையில் இந்த கைது மேற்கொள்ளப்பட்டுள்ளது.

விஞ்ஞான பீடத்தின் 2 ஆம் வருட மாணவர்கள் மோதலில் ஈடுபட்ட நிலையில் சிலர் காயமடைந்தனர். இதனால் பல்கலைக்கழகத்தின் விஞ்ஞான பீடத்தில் பதற்றமான நிலைமை காணப்பட்டது.

இதையடுத்து சம்பவம் தொடர்பில் யாழ்ப்பாணம் பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் சந்தேகத்தில் விஞ்ஞான பீடத்தில் கல்வி பயிலும் 7 மாணவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்டவர்கள் பெரும்பான்மை இனத்தை சேர்ந்தவர்கள் என குறிப்பிடப்படுகிறது.

கருத்து தெரிவிக்க