உள்நாட்டு செய்திகள்கிழக்கு செய்திகள்சமீபத்திய செய்திகள்புதியவை

“திறந்த டெனிஸ் சுற்றுப்போட்டி ஒன்பது வருடங்களுக்குப்பின் மட்டக்களப்பில்’

திறந்த டெனிஸ் சுற்றுப்போட்டி ஒன்பது வருடங்களுக்குப்பின் மட்டக்களப்பில் ஆரம்பித்து வைக்கப்பட்டது

மட்டக்களப்பு லேக் வியு டெனிஸ் சங்கம் மற்றும் இலங்கைடெனிஸ் சம்மேளனமும் இணைந்து நடாத்தும் திறந்த டெனிஸ்சுற்றுப்போட்டியின் ஆரம்ப நிகழ்வு மட்டக்களப்பில்நடைபெற்றது.

டெனிஸ் சுற்றுப்போட்டி ஒருங்கிணைப்பாளர் ஹரி பிரசாத்ஒழுங்கமைப்பில் இலங்கை டெனிஸ் சம்மேளனத்தின் டெனிஸ்அபிவிருத்தி தலைமை அலுவலகர்  பாரதிராஜ் பிள்ளைதலைமையில் இந்த சுற்றுப்போட்டி இன்று ஆரம்பித்து வைக்கப்பட்டது.

எதிர் வரும் 10ஆம் திகதி வரை  மட்டக்களப்பில்நடைபெறுகின்ற தேசிய ரீதியான டெனிஸ் சுற்றுப்போட்டியில்தேசிய ரீதியில் விளையாடுகின்ற பத்து வயதுக்கு மேற்பட்டமாணவர்கள் கலந்துகொண்டுள்ளனர் .

ஆடவர்களுக்கான இறுதி போட்டி எதிர் வரும்10 ஆம் திகதி நடைபெறவுள்ளமை  குறிப்பிடத்தக்கது.

கருத்து தெரிவிக்க