ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் தேசியப் பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை சாந்த பண்டார இராஜினாமா செய்யவுள்ளார். இது தொடர்பான அறிவித்தல் கடிதம் சபாநாயகர் கருஜயசூரியவுக்கு அனுப்பிவைக்கப்படவுள்ளது.
ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் குருணாகலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரான சாலிந்த திஸாநாயக்க நேற்று முன்தினம் (05) காலமானார்.
இதனால் ஏற்பட்டுள்ள பதவி வெற்றிடத்துக்கு விருப்பு வாக்கு பட்டியலில் அடுத்த இடத்தில் உள்ள உறுப்பினருக்கே வாய்ப்பளிக்கப்படும்.
இதன்காரணமாகவே சாந்த பண்டார தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை இராஜினாமா செய்யவுள்ளார்.
” மக்கள் பிரதிநிதியாக சபைக்கு வருவதற்கு விரும்புகின்றேன். இதன்காரணமாகவே தேசியப்பட்டியல் பதவியை இராஜினாமா செய்ய முடிவு செய்துள்ளேன்.” என்றார் சாந்த பண்டார.
கிழக்கு மாகாண ஆளுநர் பதவியை பெறுவதற்காக ஹிஸ்புல்லா, நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை இராஜினாமா செய்தார். இதனால் ஏற்பட்ட வெற்றிடத்துக்கு சாந்த பண்டார நியமிக்கப்பட்டிருந்தார்.
எனவே, ஆளுநர் பதவியை இராஜினாமா செய்துள்ள ஹிஸ்புல்லாவுக்கு நாடாளுமன்றம் வருவதற்கு மீண்டும் வாய்ப்பளிக்கப்படலாம் என எதிர்பார்க்ப்படுகின்றது.
அத்துடன், ஜனாதிபதி சட்டத்தரணி ஷிரால் லக்திலக்கவின் பெயரும் அடிபடுகின்றது.
கருத்து தெரிவிக்க