உள்நாட்டு செய்திகள்கொழும்பு செய்திகள்சமீபத்திய செய்திகள்புதியவை

ஜனாதிபதி பயணித்த வாகனத்திற்கு இடையூறு செய்த நபர் கைது

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பயணித்த வாகனம் தடைபடும் வகையில் பயணித்த கெப் ரக வண்டியின் ஓட்டுனரை கைது செய்யப்பட்டுள்ளார்

பக்கமுன பிரதேசத்தில் கடந்த 03 ஆம் தேதி கைது செய்யப்பட்டதாக பக்கமுன பொலிஸார் தெரிவித்தனர்.

வாகனம் தம்புல்ல பக்கமுன வீதியில் பயணித்துக் கொண்டிருந்தபோதே ஓட்டுநர் கைது செய்யப்பட்டுள்ளார்.

ஒழுங்கற்ற வாகனம் ஓட்டுதல் மற்றும் சந்தேகத்திற்கிடமான நடத்தை ஆகிய குற்றச்சாட்டில் அவர் கைது செய்யப்பட்டார் என்று பொலிஸார் தெரிவித்தனர்.

கருத்து தெரிவிக்க