உள்நாட்டு செய்திகள்புதியவைமலையகச் செய்திகள்

ஐ.தே.கவிற்குள் ஒற்றுமை இல்லை: குற்றம் சாட்டும் இராதா

இன்று ஐக்கிய தேசிய கட்சி ஒரு கூட்டணியை அமைத்து அதனுடைய ஜனாதிபதி வேட்பாளரை வெளியிடுவதாக இருந்தது.

ஆனால் இது எதிர்பாராத விதமாக இன்று ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. இதற்கு காரணம் கட்சிக்குள் இருக்கின்ற உட்பூசலும், அதேபோல கட்சியினுடைய ஒற்றுமை இல்லாததன் காரணமாக இது இப்போது ஒத்தி வைக்கப்பட்டுள்ளது என விசேட பிரதேசங்களுக்கான அபிவிருத்தி அமைச்சர் வே. இராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.

கொட்டகலையில் இன்று (05.08.2019 ) மலையக மக்கள் முன்னணி கட்சி காரியாலயத்தில் வைத்து அக்கரப்பத்தனை நகர ஸ்ரீ சித்தி விநாயகர் ஆலயத்திற்கு சுவாமி சிலைகளை வழங்கி வைக்கும் நிகழ்வில் கலந்து கொண்ட பிறகு ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போது அவர் இவ்வாறு தெரிவித்தார்.

ஐ.தே.க போன்றே இந்த அரசாங்கத்திலும் பல்வேறு குழப்பங்கள் நிலவுவதை நாங்கள் காணக்கூடியதாக உள்ளது.

இவ்வாறான ஒரு சூழ்நிலையில் நாட்டினுடைய எதிர்காலம் எவ்வாறு அமையும் என்பது கேள்விக்குரியாக உள்ளது .

மேலும், இந்த குழப்பங்களை நிவர்த்திக்க முதலாவதாக கட்சிக்குள் ஒற்றுமையை ஏற்படுத்தி, அதன்பிறகு பங்காளி கட்சிகளையும் இணைத்துக் கொண்டு அரசாங்கத்தினுடைய ஸ்தீரதன்மையை உறுதிப்படுத்த வேண்டும் என நாம் எதிர்பார்க்கின்றோம் எனவும்  இதன் போது அவர் தெரிவித்தார்

கருத்து தெரிவிக்க