எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெறுபவரிடம் இருக்க வேண்டிய பண்புகள் குறித்த பிரகடனத்தை வெளியிடும் நிகழ்வு மார்ச் 12 இயக்கத்தினால் மட்டக்களப்பில் இடம் பெற்றது.
மட்டக்களப்பு மாநகர சபை மண்டபத்தில், ‘மார்ச் 12 ‘ இயக்கத்தின் மட்டக்களப்பு மாவட்ட தலைவர் எஸ்.சிவயோகநாதன் தலைமையில் பிரடகன வைபவம் நடைபெற்றது.
குறித்த வைபவத்தில் பெப்பரல் அமைப்பு கிழக்கு பல்கலை கழகம் சிவில் சமுக அமைப்புக்கள் பல சமய ஒன்றியம் கிராம மட்ட சிவில் அமைப்புக்கள் என்பவற்றின் பிரதிநிதிகள் பங்கு கொண்டனர்.
தெரிவாகும் ஜனாதிபதியொருவரிடம் அனைத்து சமுகங்களையும் அணைத்துச் செல்லும் பண்புகள் சிறந்த ஜனநாயகத்தை பேணும் உன்னத நிலை கருணை உள்ளம் முடிவு எடுக்கும் ஆற்றல் உட்பட பல பண்புகளைக் கொண்டிருக்க வேண்டுமென பிரகடனத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பெப்ரல் அமைப்பு தேசிய இணைப்பாளர் சுஜீவ கயனாத் கிழக்கு பல்கலை கழக சிரேஸ்ட விரிவுரையாளர் கலாநிதி ரி.கிருஸ்ணமோகன் உட்பட பலர் விரிவுரைகளை நிகழ்த்தினர்.
கருத்து தெரிவிக்க