உள்நாட்டு செய்திகள்கொழும்பு செய்திகள்சமீபத்திய செய்திகள்புதியவை

கொழும்பின் பல பிரதேசங்களுக்கு நீர்வெட்டு!

கொழும்பின் பல பிரதேசங்களில் நீர்வெட்டு அமுல்படுத்தப்பட்டுள்ளதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை தெரிவித்துள்ளது.

அதன் அடிப்படையில் கோட்டை, கடுவெல, மஹரகம, பொரலஸ்கமுவ மற்றும் கொழும்பு 5, 7, 8 ஆகிய பகுதிகளுக்கே இவ்வாறு நீர் வெட்டு அமுல்படுத்தப்பட்டுள்ளது.

இன்று 3.00 மணிவரையில் நீர்வெட்டு அமுல்படுத்தப்பட்டிருக்கும் என தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை தெரிவித்துள்ளது.

அத்துடன் கொழும்பு 3, 4 மற்றும் 6 பகுதிகளில் குறைவான நீர்விநியோகம் அமுல்படுத்தப்பட்டுள்ளதாகவும் குறித்த சபை தெரிவித்துள்ளது.

கருத்து தெரிவிக்க