வெளிநாட்டு செய்திகள்

பிலிப்பைன்ஸில் நிலநடுக்கம் 8 பேர் உயிரிழப்பு !

பிலிப்பைன்ஸில் உள்ள லூஜன் தீவில் இத்பயாத் நகரில் இன்று அதிகாலை 4.16 மணிக்கு நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.  5.4 ரிக்டர் அளவில் பதிவான இந்நிலநடுக்கத்தால்   வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த கிறிஸ்தவ ஆலயம் ஒன்றும், அந்த பகுதியில் இருந்த வீடுகள் சிலவும் இடிந்து விழுந்தன.

சில பகுதிகளில்  வீதிகளிலும் வெடிப்புகள் ஏற்பட்டுள்ளது.  இதில் 8 பேர் உயிரிழந்துள்ளதுடன் 60 பேர் காயமடைந்துள்ளனர். இதனை அடுத்து காலை 7.38 க்கு மீண்டும் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இது  6.4 ரிக்டர் ஆக பதிவாகியுள்ளது.

கருத்து தெரிவிக்க