உள்நாட்டு செய்திகள்புதியவை

வைத்தியர் ஷாபிக்கு வாரம்தோறும் சி. ஐ. டியில் கைழுத்திட உத்தரவு

பல்வேறு குற்றங்கள் சுமத்தப்பட்டுள்ள குருநாகல் போதான வைத்தியசாலை வைத்­தியர் மொஹமட் ஷாபிக்கு நேற்று பிணை வழங்கப்பட்ட நிலையில் ஒவ்­வொரு ஞாயிறு தினத்­திலும் காலை 9 – 12 மணிக்கு இடையே குற்­றப்­பு­ல­னாய்­வுப்­பி­ரிவில் ஆஜ­ராகி கையெ­ழுத்­திட உத்­த­ரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

14 நாட்கள் விளக்­க­ம­றி­யலில் வைக்­கப்­பட்­டி­ருந்த வைத்­தியர் ஷாபி யின் வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தது.

இந்நிலையில் 2 இலட்­சத்து ஐம்­பது ஆயிரம் ரூபா ரொக்க பிணை­யிலும் 25 இலட்சம் ரூபா பெறு­ம­தி­யான நான்கு சரீர பிணை­க­ளிலும் செல்ல அவருக்கு அனுமதி வழங்கப்பட்டது.

குறித்த வழக்கு எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் 09ஆம் திகதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

கருத்து தெரிவிக்க