பல்வேறு குற்றங்கள் சுமத்தப்பட்டுள்ள குருநாகல் போதான வைத்தியசாலை வைத்தியர் மொஹமட் ஷாபிக்கு நேற்று பிணை வழங்கப்பட்ட நிலையில் ஒவ்வொரு ஞாயிறு தினத்திலும் காலை 9 – 12 மணிக்கு இடையே குற்றப்புலனாய்வுப்பிரிவில் ஆஜராகி கையெழுத்திட உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
14 நாட்கள் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த வைத்தியர் ஷாபி யின் வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தது.
இந்நிலையில் 2 இலட்சத்து ஐம்பது ஆயிரம் ரூபா ரொக்க பிணையிலும் 25 இலட்சம் ரூபா பெறுமதியான நான்கு சரீர பிணைகளிலும் செல்ல அவருக்கு அனுமதி வழங்கப்பட்டது.
குறித்த வழக்கு எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் 09ஆம் திகதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
கருத்து தெரிவிக்க