உள்நாட்டு செய்திகள்புதியவைமுக்கிய செய்திகள்வடக்கு செய்திகள்

சார்ப் மனிதநேய நிறுவனத்தால் 848168- சதுர மீற்றர் துப்புரவு

சார்ப் மனிதநேய கண்ணி வெடி அகற்றும் நிறுவனத்தால் வட பகுதியில் 848168- சதுர மீற்றர் பரப்பளவு பகுதி துப்புரவு செய்யப்பட்டுள்ளது

இலங்கையின் வடபகுதியில் மனிதாபிமான கண்ணிவெடியகற்றலில் ஜப்பான் நாட்டு நிதியுதவியுடன் ஈடுபடும் ஸார்ப் (SHARP)மனிதாபிமானக் கண்ணிவெடியகற்றும் அரச சார்பற்ற நிறுவனமானது 2016 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் தொடக்கம் 2019 யூலை மாதம் 21 ஆம் திகதி வரையான காலப்பகுதியில் முல்லைத்தீவு மாவட்டத்தில் ஒட்டுசுட்டான் பிரதேச செயலகத்தின் கீழ் உள்ள அம்பகாமம் மற்றும் தச்சடம்பன் பகுதியிலும் கிளிநொச்சி மாவட்டத்தில் பச்சிலைப்பள்ளி பிரதேச செயலகத்தின் கீழ் உள்ள முகமாலையிலும் எட்டு இலட்சத்து நாற்பத்து எட்டாயிரத்து நூற்று அறுபத்து எட்டு சதுரமீற்றர் பரப்பளவில் (848,168Sqm) இருந்து பத்தொன்பதாயிரத்து அறுபத்து நான்கு (19,064) அபாயகரமான வெடிபொருட்களை அகற்றி அழித்துள்ளது.

ஸார்ப் நிறுவனத்தின் நடவடிக்கை முகாமையாளர் ஓய்வுபெற்ற கப்டன் பிரபாத் நாரம்பனவ இதனை தெரிவித்தார்.

தொடர்ந்து இந்நிறுவனம் கண்ணிவெடியகற்றும் பணிகளை முகமாலையின் பல பகுதியில் துரித கதியில் முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

கருத்து தெரிவிக்க