உள்நாட்டு செய்திகள்புதியவை

பயங்கரவாத தாக்குதல் சந்தேகபர்களின் விசாரணை அறிக்கை கோரப்பட்டது

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பில் கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் குறித்து ஜூலை 24 அல்லது அதற்கு முன்னர் அறிக்கை சமர்ப்பிக்குமாறு சட்டமா அதிபர் (ஏஜி) செயல் காவல்துறைமா அதிபருக்கு அறிவுறுத்தியுள்ளார்.

செயல் காவல்துறைமா அதிபர் விக்கிரமரத்னவுக்கு சட்டமா அதிபர் தப்புல டி லிவேரா எழுதியுள்ள கடிதத்தில் இவ்விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.

தாக்குதலுடன் தொடர்புபட்ட ஒவ்வொரு சந்தேக நபரின் விசாரணையின் முன்னேற்றத்தையும் அறிக்கை கொண்டிருக்க வேண்டும் என சட்டமா அதிபர் அறிவுறுத்தியுள்ளார்.

மேலும், பயங்கரவாத குண்டுவெடிப்பு தொடர்பாக இதுவரை கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களின் எண்ணிக்கையும் அறிக்கையில் குறிப்பிடப்பட வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

கருத்து தெரிவிக்க