வெளிநாட்டு செய்திகள்

ரஷ்யாவிடம் இருந்து ஏவுகணைகள் வாங்கும் நாடுகளுக்கு பொருளாதார தடை : அமெரிக்கா எச்சரிக்கை

ரஷ்யாவிடம் இருந்து  ‘ எஸ்-400 ‘ ரக ஏவுகணைகளை இந்தியா உட்பட எந்த நாடு வாங்கினாலும், அந்நாடுகளுக்கு எதிராக கடும் பொருளாதார தடையை விதிக்கப் போவதாக அமெரிக்கா மீண்டும் எச்சரித்துள்ளது.  எனினும் இந்த நவீன ரக ஏவுகணைகளை ரஷ்யாவிடம் இருந்து  வாங்க இந்திய அரசு ஒப்பந்தம் செய்துள்ளது.

இந்நிலையில் அமெரிக்க- இந்திய உறவு முன்பை விட இப்போது பலமுள்ளதாக  இருக்கிறது. இந்த நேரத்தில் இந்தியா ஏவுகணைகள் வாங்குவதை கடுமையாக எதிர்ப்பதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது.

மேலும் ரஷ்யாவிடம் இருந்து நவீன ரக ஏவுகணைகள் வாங்கும் நாடுகளுக்கு எதிராக கடும் பொருளாதார தடை விதிக்கும் சட்ட வரைவு ஏற்கனவே நிறைவேற்றப்பட்டுள்ளது. எனவே ஏவுகணைகள் வாங்கும் முடிவை  இந்தியா உள்ளிட்ட நாடுகள் கைவிட வேண்டும் என தெரிவித்துள்ளது.

கருத்து தெரிவிக்க