உள்நாட்டு செய்திகள்

இலங்கைக்கான நேபாள தூதுவர் ராஜினாமா

இலங்கைக்கான நேபாள தூதுவர் பிஸ்வம்பர் பியக்குர்யால் தமது பதவியை இராஜினாமா செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

நேபாள வெளியுறவு துறை பேச்சாளர் இதனை தெரிவித்துள்ளார்.

ஒன்றரை மாதங்களுக்கு முன்னர் பதவி விலகல் தொடர்பான கடிதம் வழங்கப்பட்டுள்ளதாகவும் நேற்றுமுன்தினம் முறைப்படி அவர் பதவியிலிருந்து விலகி உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

நேபாள வெளியுறவுத்துறை அமைச்சு தமக்கு உரிய முறையில் ஒத்துழைப்பு வழங்கவில்லை என தெரிவித்தே அவர் பதவி விலகுவதாக கூறப்படுகிறது.

பதவி ஏற்ற காலத்தில் இருந்து சுமார் 24 கடிதங்கள் வெளியுறவு துறை அமைச்சுக்கு அனுப்பப்பட்டதாகவும் கடிதங்களுக்கு பதில் அனுப்பபடாத காரணத்தினால் பிஸ்வம்பர் பதவி விலகுவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

கருத்து தெரிவிக்க