உள்நாட்டு செய்திகள்புதியவை

போதைப்பொருளை கட்டுப்படுத்த இயந்திரங்கள் இறக்குமதி

போதைப்பொருள் பயன்பாட்டை ஒழிக்கும் நோக்கில்  போதைப்பொருள் கண்டறியம் 600 இயந்திரங்களை இறக்குமதி செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக போக்குவரத்து பிரதி காவல்துறை மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்தார்.

இந்த உபகரணங்கள் அடுத்த மூன்று மாதங்களுக்குள் நாட்டிற்கு இறக்குமதி செய்யப்படும் என்று அவர் குறிப்பிட்டார்.

இந்த சாதனங்களைப் பயன்படுத்தி மொத்தம் 20 போதைப்பொருள் வகைகளைக் கண்டறிய முடியும் என்று அவர் விளக்கினார்.

இந்த சாதனங்கள் அனைத்து காவல் நிலையங்களின் போக்குவரத்து பிரிவுகளுக்கு விநியோகிக்கப்படும் என்றும் போதைப்பொருட்களை கொண்டு செல்லும் வாகனங்களைத் தேடும்போது பயன்படுத்தப்படும் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.

கருத்து தெரிவிக்க