உள்நாட்டு செய்திகள்கொழும்பு செய்திகள்சமீபத்திய செய்திகள்புதியவை

தொடரூந்து மோதி விபத்து – தந்தையும் மகளும் பலி

வெயாங்கொட பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் மோட்டார் சைக்கிள் ஒன்று வதுரவ தொடரூந்துடன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.

குறித்த விபத்து இன்று காலை 6.45 மணி அளவில் இடம்பெற்றுள்ளது.

காங்கேசந்துறையில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்துக்கொண்டிருந்த தொடரூந்துடன் மோட்டார் சைக்கிள் மோதியதில் குறித்த விபத்து நிகழ்ந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

இந்த விபத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்த நபரும், அவரது மகளும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர்.

உயிரிழந்தவர்களின் சடலங்கள் வத்துபிடிவல வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளன.

விபத்து குறித்த மேலதிக விசாரணைகளை வெயாங்கொட பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

கருத்து தெரிவிக்க