உள்நாட்டு செய்திகள்முக்கிய செய்திகள்

சில அமைச்சுகள்மீது மைத்திரி கழுகுப்பார்வை!

முக்கிய சில அமைச்சுகளின் செயற்பாடுகள் தொடர்பில்  ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன விரிவான அறிக்கையொன்றை கோரியுள்ளார் என நம்பகரமான அரசியல் தரப்புகளிலிருந்து அறியமுடிகின்றது.

ஜனாதிபதி செயலாளர் மற்றும் அமைச்சரவை செயலாளர் ஊடாக இதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுவருகின்றன.

சில  அமைச்சுகளுக்கு  எதிராக முன்வைக்கப்பட்டுள்ள முறைப்பாடுகளை மையப்படுத்தியே இந்த  அறிக்கையை ஜனாதிபதி கோரியுள்ளார் எனவும் கூறப்படுகின்றது.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு எதிராக குற்றப் பிரேரணையொன்றை முன்வைக்கும் முயற்சியில் ஐக்கிய தேசியக் கட்சியின் பின்வரிசை நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஈடுபட்டுவருகின்றனர்.

இதன்பின்னணியில் ஐ.தே.கவின் முக்கிய அமைச்சர்கள் சிலர் செயற்படுவதாக ஜனாதிபதிக்கு தகவல்கள் கிடைத்துள்ளன.

இவ்வாறானதொரு பின்புலத்திலேயே ஜனாதிபதியாலும் அதிரடி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அரசியல் களத்தில் பரபரப்பாக பேசப்படுகின்றது.

கருத்து தெரிவிக்க