வெளிநாட்டு செய்திகள்

ஆப்கானிஸ்தானில் பயங்கரவாதிகளின் தாக்குதலில் 8 பொலிசார் பலி!

ஆப்கானிஸ்தானில் இராணுவத்தினருக்கும் தலிபான் தீவிரவாதிகளுக்கும் இடையில் தொடர்ந்து மோதல்கள் நடைபெற்று வரும் நிலையில்,  நேற்று பத்கிஸ் மாகாணத்தின் தலைநகர்  குவல் இ நாவ் நகரில் உள்ள உயர்தர உணவு விடுதி ஒன்றில் தலிபான்கள் தாக்குதல் நடத்தி உள்ளனர். குறித்த தகவல் கிடைத்ததும் பொலிசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று உணவு விடுதியை சுற்றி வளைத்தனர். இதையடுத்து இரு தரப்புக்கும் இடையே  கடும் துப்பாக்கி சண்டை நடந்தது. இதில்  3 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டதுடன் 2 பேர் கைது செய்யப்பட்டனர். அதேநேரம் பயங்கரவாதிகளின் தாக்குதலில் 8 பொலிஸ் அதிகாரிகள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். பொதுமக்கள் உட்பட 18 பேர் படுகாயமடைந்துள்ளனர்.

கருத்து தெரிவிக்க