உள்நாட்டு செய்திகள்கொழும்பு செய்திகள்சமீபத்திய செய்திகள்புதியவை

சட்டவிரோதமான மாத்திரைகளை இறக்குமதி செய்த மூவர் கைது

இலங்கையிலிருந்து 3 லட்சத்து 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட சட்டவிரோதமான மாத்திரைகளை இறக்குமதி செய்தார்கள் என்ற குற்றச்சாட்டில்  பிரித்தானியாவில் மூவர் கைது செய்யப்பட்டுள்ளார்கள்.

இவர்கள் மூவரும் பிரித்தானிய நாட்டை சேர்ந்தவர்கள் என தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

குறித்த மாத்திரைகளின் பெறுமதி இலங்கை ரூபாவில் 7 மில்லியன் ரூபா என தெரிகிறது அதேபோல பிரித்தானிய பவுண்ட்ஸ் இல்  32,000 என தெரிவிக்கப்படுகின்றது.

இது தொடர்பில் சவுத் வேல்ஸ் காவல்துறையினர் தெரிவித்திருக்கின்ற தகவலின் படி இந்த சம்பவம் தொடர்பாக விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுவருகின்றது.

2018 ஆம் ஆண்டு மார்ச் மாதம் இந்த மாத்திரைகள் இறக்குமதி செய்யப்பட்டிருப்பதாகவும் காவல் துறையினர் தெரிவிக்கின்றனர்.

கருத்து தெரிவிக்க