உள்நாட்டு செய்திகள்கொழும்பு செய்திகள்சமீபத்திய செய்திகள்புதியவை

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன தமது பங்காளி கட்சிகளுக்கு விடுத்துள்ள செய்தி

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன தமது பங்காளி கட்சிகளுக்கு எதிர்வரும் ஆகஸ்ட் 17 ஆம் திகதி நடைபெறவிருக்கின்ற மாநாட்டுக்கான அழைப்பிதழ் விடுத்திருக்கின்றது.

இந்த மாநாட்டின் போது ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் அறிவிக்கப்படவுள்ளார்.

எனவே அந்த மாநாட்டுக்கு அனைவரும் கலந்துகொள்ள வேண்டும் என ஏனைய பங்காளி கட்சிகளுக்கு அழைப்பு விடுத்திருக்கின்றது.

இதேவேளை ஸ்ரீ இலங்கை சுதந்திர கட்சியுடன் தமது கட்சி தொடர்ந்தும் நல்லுறவை பேண கூடிய வகையில் உடன்படிக்கை ஏற்படுத்திக்கொள்ளப்படும் என்றும் மகிந்த ராஜபக்ஷ தலைமையிலான இந்த ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி தெரிவித்திருக்கிறது.

கருத்து தெரிவிக்க