உள்நாட்டு செய்திகள்புதியவை

ஞானசார தேரர் விடுதலை:மனு விசாரணை ஒத்திவைப்பு

கலகொட அத்தே ஞானசார தேரருக்கு வழங்கப்பட்ட பொது மன்னிப்புக்கு எதிராக கொள்கை மாற்று மையம் (சிபிஏ) தாக்கல் செய்த அடிப்படை உரிமை மனு செப்டம்பர் 10 ஆம் திகதி வரை உச்சநீதிமன்றத்தால் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

குறித்த மனுவானது நீதிபதிகள் புவனேக அலுவிஹார, பிரசன்ன ஜெயவர்தன, மற்றும் எல்டிபி தெஹிதெனிய ஆகிய மூன்று பேர் கொண்ட நீதிபதி குழு முன் விசாரணைக்கு வந்தபோது இவ்வறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது.

‘நீதிமன்ற அவமதிப்பு குற்றவாளி’ என அறிவிக்கப்பட்ட ஞானசார தேரரை விடுவிப்பதற்கான ஜனாதிபதியின் முடிவுக்கு எதிராக குறித்த மனு அளிக்கப்பட்டது, இத்தகைய முடிவு நீதி சுதந்திரத்திற்கு பாதிப்பை ஏற்படுத்தக்கூடும் என்று மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

கருத்து தெரிவிக்க