உள்நாட்டு செய்திகள்கொழும்பு செய்திகள்புதியவைமுக்கிய செய்திகள்

சஹ்ரானுடன் பயிற்சி பெற்ற இருவர் கைது-காவல்துறை

உயிர்த்த ஞாயிறுத் தாக்குதலின் மூலகர்த்தாவான சஹ்ரானுடன் கண்டி அருப்பொலையில் பயிற்சி பெற்றவர் என கருதப்படும் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
மொஹம்மது முக்தர் அசிஸ் பாஷாட் என்ற இவர் இன்று பேராதெனியாவில் வைத்து கைது செய்ய ப்பட்டதாக காவல்துறை தெரிவித்துள்ளது.
இதேவேளை சஹ்ரானுடன் ஹம்பாந்தோட்டையில் பயிற்சி பெற்றவர் என கூறப்படும் ஷாஹுல் ஹமீட் அப்துல்லாஹ் என்பவர் வெலிமடையில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.
இவர்கள் இருவரும் பயங்கரவாத தடுப்பு பிரிவினரிடம் கையளிக்கப்பட்டுள்ளனர்

கருத்து தெரிவிக்க