உள்நாட்டு செய்திகள்புதியவை

அரச ஊழியர்களுக்கான போட்டி பரீட்சைகள் இந்த வாரம்

மதிப்பீட்டு புள்ளிவிபரத் திணைக்களத்திற்கு ஊழியர்களை இணைத்துக் கொள்வதற்கான போட்டிப் பரீட்கைள் எதிர்வரும் வாரத்தில் இடம்பெறவுள்ளது.

குறித்த போட்டிப் பரீட்சை எதிர்வரும் 27ஆம் திகதி கொழும்பில் இடம்பெறவுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் சனத் பூஜித்த தெரிவித்துள்ளார்.

6,500 பரீட்சாத்திகள் இந்த பரிட்சையில் தோற்றவுள்ளனர்.

இதேவேளை மத்திய சுற்றாடல் அதிகார சபைக்கு சிரேஷ்ட சுற்றாடல் அதிகாரிகளை இணைத்துக் கொள்வதற்கான போட்டிப் பரீட்சை எதிர்வரும் 28ம் திகதி நடைபெறும்.

அத்துடன் அடுத்த மாதம் நடைபெறவுள்ள கல்விப்பொதுத் தராதர உயர்தரப் பரீட்சைக்கும், தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சைக்கும் பரீட்சைத் திணைக்களம் தற்போது தயாராகி வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

கருத்து தெரிவிக்க